பக்கம் – 7 (ஹதீஸ்கள் 61 முதல் 70 வரை)
அத்தியாயம்: முகத்திமா – முகப்பு
61 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا حَمَّادُ بن نَجِيحٍ وكان ثِقَةً عن أبي عِمْرَانَ الْجَوْنِيِّ عن جُنْدُبِ بن عبد اللَّهِ قال كنا مع النبي وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قبل أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا |
ஹதீஸ் எண்: 61
‘நாங்கள் இளைஞர்களாக இருந்த போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறோம். குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்கு முன் ஈமானைக் கற்றுக் கொண்டோம். பின்னர் குர்ஆனைக் கற்று அதன் மூலம் ஈமானை அதிகப்படுத்திக் கொண்டோம்’ என்று ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
62 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا محمد بن فُضَيْلٍ ثنا عَلِيُّ بن نِزَارٍ عن أبيه عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ صِنْفَانِ من هذه الْأُمَّةِ ليس لَهُمَا في الْإِسْلَامِ نَصِيبٌ الْمُرْجِئَةُ وَالْقَدَرِيَّةُ |
ஹதீஸ் எண்: 62
என் சமுதாயத்தில் தோன்றும் இரு பிரிவினருக்கு, இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை. (விதியை மறுக்கின்ற) கத்ரியா என்பவர்களும், (எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம், ஈமான் மட்டும் போதும் என்று கூறுகின்ற) ‘முர்ஜியா’ என்பவர்களுமே அவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)
63 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن كَهْمَسِ بن الْحَسَنِ عن عبد اللَّهِ بن بُرَيْدَةَ عن يحيى بن يَعْمَرَ عن بن عُمَرَ عن عُمَرَ قال كنا جُلُوسًا عِنْدَ النبي فَجَاءَ رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ شَعَرِ الرَّأْسِ لَا يُرَى عليه أَثَرُ سَفَرٍ ولا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ قال فَجَلَسَ إلى النبي فَأَسْنَدَ رُكْبَتَهُ إلى رُكْبَتِهِ وَوَضَعَ يَدَيْهِ على فَخِذَيْهِ ثُمَّ قال يا محمد ما الْإِسْلَامُ قال شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَنِّي رسول اللَّهِ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَحَجُّ الْبَيْتِ قال صَدَقْتَ فَعَجِبْنَا منه يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ثُمَّ قال يا محمد ما الْإِيمَانُ قال أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَكُتُبِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ قال صَدَقْتَ فَعَجِبْنَا منه يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ثُمَّ قال يا محمد ما الْإِحْسَانُ قال أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إن لَا تَرَاهُ فإنه يَرَاكَ قال فَمَتَى السَّاعَةُ قال ما الْمَسْئُولُ عنها بِأَعْلَمَ من السَّائِلِ قال فما أَمَارَتُهَا قال أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا قال وَكِيعٌ يَعْنِي تَلِدُ الْعَجَمُ الْعَرَبَ وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ في الْبِنَاءِ قال ثُمَّ قال فَلَقِيَنِي النبي e بَعْدَ ثَلَاثٍ فقال أَتَدْرِي من الرَّجُلُ قلت الله وَرَسُولُهُ أَعْلَمُ قال ذَاكَ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ مَعَالِمَ دِينِكُمْ |
ஹதீஸ் எண்: 63
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், கன்னங்கரிய தலைமுடியும், வெள்ளை வெளேர் நிறமும் கொண்ட ஒரு மனிதர் வந்தார். பிரயாணத்தின் அறிகுறி எதுவும் அவரிடம் தென்பட வில்லை. எங்களில் எவருக்கும் அவரைத் தெரியவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன் முழங்காலை அவர்களின் முழங்காலுடன் ஒட்டி உட்கார்ந்து, தன் தொடை மீது தன் கைகளை வைத்துக் கொண்டார்.
‘முஹம்மதே! இஸ்லாம் என்பது எது? என்று அவர் கேட்கலானார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புவதும், நான் நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதி கொள்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத் வழங்குவதும், ரமளானில் நோன்பு நோற்பதும், (இறை) இல்லத்தை ஹஜ் செய்வதுமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் கூறுவது உண்மையே! என்று வந்தவர் கூறினார். இவர் கேள்வியும் கேட்டுவிட்டு அதை உண்மை எனவும் கூறுகிறாரே! என்று நாங்கள் வியப்படைந்தோம்.
‘முஹம்மதே! ஈமான் என்பது எது?’ என்றார். அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது வேதங்களையும், இறுதி நாளையும், நன்மை தீமை உட்பட விதியையும் நம்புவதே ஈமான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் கூறுவது உண்மையே! என்று அவர் சொன்னார். கேள்வியும் கேட்டுவிட்டு, அதை உண்மைப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
‘முஹம்மதே! இஹ்ஸான் என்பது எது?’ என்று வந்தவர் கேட்டார். இறைவனை நீ காண்பது போல் அவனை வணங்குவது தான் (இஹ்ஸான்). நீ அவனைக் காணாவிட்டாலும் நிச்சயம் அவன் உன்னைக் காண்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘யுகமுடிவு நாள் எப்போது?’ என்றார் அவர். இது பற்றிக் கேட்பவரை விட (அதாவது உங்களைவிட) கேட்கப்படுபவர் (அதாவது நான்) மிக அறிந்தவனில்லை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
‘அதன் அடையாளம் எவை?’ என்று அவர் கேட்டார். ஒரு அடிமைப்பெண் தன் எஜமானியை ஈன்றெடுப்பதும், ஆடு மேய்த்துக் கொண்டு, வறிய நிலையில் செருப்பணியாமலும் நிர்வாணிகளாகவும் இருந்தவர்கள் உயர்ந்த கட்டிடங்களை எழுப்புவதை நீர் காண்பதும் அந்த அடையாளங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று நாட்களுக்குப் பின் என்னை நபி ஸல் அவர்கள் சந்தித்து ‘அந்த மனிதர் யாரெனத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும்இ அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்றேன். அவர் தான் ஜிப்ரீல்! உங்கள் மார்க்க நடைமுறைகளைக் கற்றுத்தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.
(குறிப்பு: ஒரு சில மாற்றங்களுடன் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
64 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن أبي حَيَّانَ عن أبي زُرْعَةَ عن أبي هُرَيْرَةَ قال كان رسول اللَّهِ e يَوْمًا بَارِزًا لِلنَّاسِ فَأَتَاهُ رَجُلٌ فقال يا رَسُولَ اللَّهِ ما الْإِيمَانُ قال أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الْآخِرِ قال يا رَسُولَ اللَّهِ ما الْإِسْلَامُ قال أَنْ تَعْبُدَ اللَّهَ ولا تُشْرِكَ بِهِ شيئا وَتُقِيمَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ وتؤدى الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ قال يا رَسُولَ اللَّهِ ما الْإِحْسَانُ قال أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إن لَا تَرَاهُ فإنه يَرَاكَ قال يا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قال ما الْمَسْئُولُ عنها بِأَعْلَمَ من السَّائِلِ وَلَكِنْ سَأُحَدِّثُكَ عن أَشْرَاطِهَا إذا وَلَدَتْ الْأَمَةُ رَبَّتَهَا فَذَلِكَ من أَشْرَاطِهَا وإذا تَطَاوَلَ رِعَاءُ الْغَنَمِ في الْبُنْيَانِ فَذَلِكَ من أَشْرَاطِهَا في خَمْسٍ لَا يَعْلَمُهُنَّ إلا الله فَتَلَا رسول اللَّهِ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ ما في الْأَرْحَامِ وما تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وما تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ |
ஹதீஸ் எண்: 64
நபி ஸல் அவர்கள் ஒரு நாள் மக்களிடம் வந்தார்கள். அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஈமான் என்பது எது?’ என்று கேட்டார். அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும், அவனது சந்திப்பையும் நம்புவதுடன், இறுதியாக திரும்பவும் எழுப்பப்படுவதையும் நீங்கள் நம்ப வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான் என்பது எது? என்று அவர் கேட்டார். அல்லாஹ்வை நீ காண்பது போல் அவனை நீ வணங்குவது (இஹ்ஸான்). நீ அவனைக் காணாவிட்டாலும் நிச்சயம் அவன் உன்னைக் காண்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உலகமுடிவு நாள் எப்போது? என்றார் அவர். இது பற்றி கேட்பவரை விட கேட்கப்படுபவர் மிக அறிந்தவரில்லை. எனினும் அதன் சில அடையாளங்களை நான் உமக்குக் கூறுகிறேன். ஒரு அடிமைப் பெண் தன் எஜமானியை ஈன்றெடுப்பதும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தோர் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வதும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறிய மாட்டார்கள் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தையும் நபி ஸல் அவர்கள் ஓதக் காட்டினார்கள்.
கியாமத் நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. மழையை அவனே இறக்குகிறான். கார்ப்ப அறையில் உள்ளதை அவனே அறிகிறான். நாளை தான் எதை சம்பாதிப்போம் என்பதை எந்த ஆன்மாவும் அறிய முடியாது. எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் எந்த ஆன்மாவும் அறிய முடியாது. நிச்சயமாக அல்லாஹ் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாவான். (அல்குர்ஆன் 31:34)
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
65 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ وَمُحَمَّدُ بن إسماعيل قالا ثنا عبد السَّلَامِ بن صَالِحٍ أبو الصَّلْتِ الْهَرَوِيُّ ثنا عَلِيُّ بن مُوسَى الرِّضَا عن أبيه عن جَعْفَرِ بن مُحَمَّدٍ عن أبيه عن عَلِيِّ بن الْحُسَيْنِ عن أبيه عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال قال رسول اللَّهِ الْإِيمَانُ مَعْرِفَةٌ بِالْقَلْبِ وَقَوْلٌ بِاللِّسَانِ وَعَمَلٌ بِالْأَرْكَانِ قال أبو الصَّلْتِ لو قُرِئَ هذا الْإِسْنَادُ على مَجْنُونٍ لَبَرَأَ |
ஹதீஸ் எண்: 65
ஈமான் என்பது உள்ளத்தால் அறிவதும், நாவால் மொழிவதும், கடமைகளைச் செயல்படுத்துவதுமாகும், என நபி ஸல் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபுஸ்ஸல்த்’ என்பவர் பலவீனமானவர் என்பது ஹதீஸ்கலை வல்லுனர்களின் ஒரு மித்த முடிவாகும்.)
66 حدثنا محمد بن بَشَّارٍ وَمُحَمَّدُ بن الْمُثَنَّى قالا ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ قال سمعت قَتَادَةَ يحدث عن أَنَسِ بن مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ e قال لَا يُؤْمِنُ أحدكم حتى يُحِبَّ لِأَخِيهِ أو قال لِجَارِهِ ما يُحِبُّ لِنَفْسِهِ |
ஹதீஸ் எண்: 66
‘தனக்கு விரும்பக் கூடியவைகளைத் தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் மூமினாக முடியாது’ என நபி ஸல் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
67 حدثنا محمد بن بَشَّارٍ وَمُحَمَّدُ بن الْمُثَنَّى قالا ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ قال سمعت قَتَادَةَ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ لَا يُؤْمِنُ أحدكم حتى أَكُونَ أَحَبَّ إليه من وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ |
ஹதீஸ் எண்: 67
தன் குழந்தைகள், தன் தந்தை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் என்னை நேசிக்காதவரை ஒருவன் மூமினாக முடியாது என நபி ஸல் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
68 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ وأبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ وَالَّذِي نَفْسِي بيده لَا تَدْخُلُوا الْجَنَّةَ حتى تُؤْمِنُوا ولا تُؤْمِنُوا حتى تَحَابُّوا أَوَ لَا أَدُلُّكُمْ على شَيْءٍ إذا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ |
ஹதீஸ் எண்: 68
என் உயிர் எவனது கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக, விசுவாசம் கொள்ளாதவரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசக்காதவரை விசுவாசம் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் படியான செயலை நான் உங்களுக்குக் கற்றுத் தரட்டுமா? (என்று கேட்டு விட்டு) உங்களுக்கிடையே ஸலாமைப் பரவச் செய்யுங்கள்! என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
69 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا عَفَّانُ ثنا شُعْبَةُ عن الْأَعْمَشِ ح وحدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عِيسَى بن يُونُسَ ثنا الْأَعْمَشُ عن أبي وَائِلٍ عن عبد اللَّهِ قال قال رسول اللَّهِ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ |
ஹதீஸ் எண்: 69
‘முஸ்லிமை ஏசுவது குற்றமாகும், அவனைக் கொல்வது இறை மறுப்பு (குப்ரு) ஆகும்’ என நபி ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
70 حدثنا نَصْرُ بن عَلِيٍّ الْجَهْضَمِيُّ ثنا أبو أَحْمَدَ ثنا أبو جَعْفَرٍ الرَّازِيُّ عن الرَّبِيعِ بن أَنَسٍ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ من فَارَقَ الدُّنْيَا على الْإِخْلَاصِ لِلَّهِ وَحْدَهُ وَعِبَادَتِهِ لَا شَرِيكَ له وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ مَاتَ وَاللَّهُ عنه رَاضٍ قال أَنَسٌ وهو دِينُ اللَّهِ الذي جَاءَتْ بِهِ الرُّسُلُ وَبَلَّغُوهُ عن رَبِّهِمْ قبل هَرْجِ الْأَحَادِيثِ وَاخْتِلَافِ الْأَهْوَاءِ وَتَصْدِيقُ ذلك في كِتَابِ اللَّهِ في آخِرِ ما نَزَلَ يقول الله ) فَإِنْ تَابُوا ( قال خَلْعُ الْأَوْثَانِ وَعِبَادَتِهَا ) وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ ( وقال في آيَةٍ أُخْرَى ) فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ في الدِّينِ ( حدثنا أبو حَاتِمٍ حدثنا عُبَيْدُ اللَّهِ بن مُوسَى الْعَبْسِيُّ حدثنا أبو جَعْفَرٍ الرَّازِيُّ عن الرَّبِيعِ بن أَنَسٍ مثله |
ஹதீஸ் எண்: 70
‘அல்லாஹ் ஒருவனுக்காக கலப்பற்ற முறையில் வாழ்ந்து, இணையற்ற இறைவனை வணங்கி, தொழுகையை நிலை நாட்டி, ஜகாத்தை வழங்கியவனாக உலகை ஒருவன் பிரிந்து சென்றால், அல்லாஹ் அவனை திருப்தி கொண்டவனாகவே அவன் மரணிப்பான்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
செய்திகளில் கலப்படமும், மாறுபட்ட மனோ இச்சைகளும் ஏற்படுமுன், இறைதூதர்கள் தங்கள் இறைவனிடமிருந்து பெற்று பிரச்சாரம் செய்த மார்க்கம் இது தான். இதற்குச் சான்று அல்லாஹ்வின் வேதத்திலேயே இறுதியாக இறங்கிய வசனத்திலேயே உள்ளது.
‘அவர்கள் திருந்தி தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் வழங்கி விட்டால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்’ (9:5)
அவர்கள் திருந்தி தொழுகையை நிலைநாட்டிஇ ஜகாத்தும் வழங்கிவிட்டால் அவர்கள் மார்க்கத்தில் உள்ள சகோதரர்களாவர் (9:11) என்று அனஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் தொடர்ந்து குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் அறிமுகமற்றவர்கள் இடம் பெறுவதால் இது பலவீனமானதாகும்.)